கொல்லவாரு சமூக செப்பேடு, 1543:-
![]() |
அசல் செப்பேடு - முதல் பக்கம் |
![]() |
அசல் செப்பேடு - இரண்டாம் பக்கம் |
சாலிவாகன வருடம் :- சக வருடம் 1465 ஸ்ராவண மாதம், வியாழக்கிழமை
ஆங்கில வருடம் :- கி.பி.1543, ஆவணி மாதம், 16ம் நூற்றாண்டு
மொழி:- செப்பேடு முழுவதும் தெலுங்கு மொழில் உள்ளது.
பொருள்:- கொல்லவாருகள் மந்தெச்சுலவாருகளுக்கும், மந்த கொல்லவாருக்கும் உரிமைகள் வழங்கிய சாசனம்.
முதல் பக்கம்
![]() |
முதல் பக்கம் |
![]() |
முதல் பக்கம் (1) |
యాదవ సంఘం
1, శ్రి న్వస్తి సమస్త శాలివాహన శక వర్షంబులు అగు నేటె వ్య వహరిక చాంద్ర మాన ౧౪౬౫ యిశ్వరనామ
2, సం॥శ్రావణ॥శు॥౫॥గురువారం రోజ్ని చింతలపాటె సూకలాంబకం చిలోమహదేపుని ముఖమం
3, టపాన కాటమరాజు అయితమరాజు భూతనాధులయిన వజ్ర సింహాసనం పై కూర్చుండ సంప-
4, న్న కోటె యాదవకులానికి భరతుడు పల్లికొండన్ని యొను కటెసుద్దులు అడుగగ పూర్వ కాలం
5, నాడు సప్తతరరాజులు పుత్రాది మందరగిరి అయోధ్య దరసి బాసర పురంబుని రవివం-
6, శ పాలకామ గోత్రికలయ్ని ఆవులభూపతి యయాతిరాజు సంతతి సత్యప్రతుడు గం-
7, గురాజు నుంచి కైలాస పురంబున శంకరుని దలచి ఉత్తరప్రాంతం వదలి వల్లావుల వల
8, వలరాజు దక్షిణ ప్రాంతానికి బయలు దేరి ఆద్దులు కనకసింహలకోట అద్ద సర్పగట్ల ఓరు
9, గల్లు దేవతలయ్ని గుర్తించ కటెంచిలా వల్లమ్మబండ కాళింగ వుడుగు గోవర్దనగిరి మాలు
10, సుక్క పర్వతం పై పవల్లమాదేవి తపసు కోరి శంకరుని వరంబున పంచ పుత్రుల పుత్రికనరినిజం-
11, గాల కు పర్వతం దాసులకు తిరుపతి తనయులకు దొనకొండ తప్పక కటె అగ్ని పాలయినతల్లి కొడు-
12, కులు సాదించినయుద్ధ కాండాల అద్దులు శీకురిగారమల్ల కోట మొనుగునాధునికోట బెజవాడ
13, సిలానంది నుంచి శ్రీమతి ౫౬రాద్యాలకు కులగోత్రలవారి ఓరుగల్లు ప్రతాపరుద్రని సమనానంమె
14, కంచర్లవారికి యాదవులకు జగడం పదితేజాల అయితమరాజు యుద్ధం చేసి కంచర్లవారిని ఓడిం-
15, చి యాదవులను గెలిపెంచను అంతలొ పద్రుడుదు ఆలోచించి ముత్యాలపల్లకి పోతుగుర్రం పుల్లెడ
16, మెరిమాదిలో నాలుగుబజాప్ల వూరేగింబ అల పద్మములు తిమూర్తూలు చెలి** బిరుదులు యాద-
17, వరాజులకు చెల్లును బతిరన్న పాలించిననదులు గంగయుమున సరస్వతి కృష్ణ సర్మద సిందు కావి
18, రి మేర్వ పర్వతం శ్రిశైల కాళేశ్వరం హిమాచలం కాశి ఎరలేశ్వరం మహానంది రామేశ్వరం శ్రీరం-
19, గం పంచలింగాల కొండ భద్రాచలం పెనుగంచి పోలు ఏరప్పకొండ సిద్దేశ్వరం కోటప్పకొండ
20, రామప్ప దేవాలయంనుంచి ఎర్రయ్యరాజు ఆవులమెసిన గోరతటా కప్రాంతాల అద్దు దతుది మొలక
21, ర్వ పెనుగొండ నూవు రంగట్ల నారదునికోండ అప్పుతగిరి సప్త స్వాముల లోటె కాటమరాజువాదంకొ
22, న్న కానుంచి గోవులకుగది జలాని కజరిగిన అద్దులు రాయలగెటకొండ నండూదూవాడు నందికొం-
23, డ గటాలు పల్నాడు పెన్నె చేలేరుతుంగభధ్ర గోదావరి వలి వంశాదారల మరాపతి నల్లలెగత
24, అరుర్లకర్వ గంగ్యావులజలానికి కొండలు రాంగిరి మద్దెడ మున్న రునందకొండ దుర్వము క్వోసర
25, సింహుని కొండయాను పరాలి గల్లుజటాముని కుర్లపాకాల దేవగిరి లంకొండ గటాలూ అనంతగిరి కన్నెరధ-
26, ర్మపురి చంద్రగిరి మానెరు మావిలికూర్వ రామగుండం యుద్దగిరి గుత్తి కొండ కారరపుడి కొండవీడు
27, కమ్మం మెట్లు యినకొండ బెలకొండ బ్రమరాంబ కుర్స పోలేరమ్మ అర్నం కుర్వబ కామంచిగంటకాడ
28, కంకవండ్ల సాంబ్రం అవులకు చుట్టు కుంటెమొదలు చెప్పిన అయ్యల అనుగ్రహం చాలెపులివెం
29, టనుంచి గోవులను నెల్లురి ప్రాంతినికి ప్రయాణమె పోగవాగలుం నుండి అన్నగార్య ఒరిగ
30, న అన్న గార్కి బరగన అపా యమన గాపగవారి సుకధనన్నుతెచ్చిన గజ ఎర్రయ్య సూపు సూపు
31, ఎర్రగడ్డ పైన యాదవరాజుల కుమొదటినుంచి జరిగివధర్మ కష్టలు పెత్త ని చేతుల పెట్టె
இரண்டாம் பக்கம்
![]() |
இரண்டாம் பக்கம் |
![]() |
இரண்டாம் பக்கம் (1) |
32, ఆయుధాతో కుమ్మ కపరమపదింతురని పలికెనుయిక్కడి నుండి పోతురాజు కుర్వకురాగ కాటమరా
33, జుగంగను పెండ్లి ఆదవలేనని పాలెపడప్నెంగెను అక్కడమొకాంచేసి ఆకాశమెత్తు వేభూలక్ష్మి పై
34, నగద్దె వేసి ముతాలుకుప్పలు పోసికూర్చిన ముతాలు తోరణాలు కట్టె కత్తికికంకణం ఎద్దుకుబాసి
35, కంకట్టె కాటమరాజు గంగను పెండ్లె ఆడెనుమరునాడు అనంతకోటె యాదవులకు పిలువ నంపి ఆ
36, వుల కుబలిముద్దవేయవని చెప్పెను అందరు మాకుచాతకాదనిరి అందులో ఒకమందబోయు
37, డు చూచి కాటమరాజూ అయితమరాజు పల్లికొండరాజుల మొత్తం సెలవుతీనుకుని ఆవుల చుట్టు
38, బలిముద్ద వేసివచ్చెవరకు శెలగోల బిరుదు యాదవులమొత్తానికి అందెను మందగొల్ల జగ్గయ్యకు
39, అందని కారణం రాజ్ల విచారించగ నీమ మందుమిదమై కొన్న మందహెచ్చువాడపై తిరుగుమనిరియిందు
40, కు ఆదారం మియితనికి యాదవులనగ ఎర్రగొల్ల పాకనాటిగొల్ల పూజగొల్ల ముదటెగొల్ల సదనగొ
41, ల్ల ముష్ఠిగొల్ల కర్నెగొల్ల ఎయగొల్ల పెద్దెటిగొల్ల తిర్నగొల్ల మందగొల్ల ౧౨ కులాలు దేవుని పూజకు ఎ
42, ర్రగొల్ల ఎవ్వముల్లం తహిచ్చు పరిముల్లంత వాసిని విభూతి వీరగంధాలకు అందరు కర్తలై అందుల
44, నె పదకొండుయాదవకులాలవారు వకమందగొల్ల బత్తునిధర్మ శాసనం రాగిపత్రం మీదవ్రాసియిచ్చిన
45, హక్కులనగాపది ఆవులుగొడ్డలికల గొల్లవకల్యగను తొమ్మిది మ్యాకలు మొలకతిగొల్ల ఒకమ్యాకపిల్ల
46, నువ్యవసాయంచేసెవారు పాగ పచ్చడం పశువుల మేపినవారు పాలేరుగాచేసిన వడాదిజితం-
47, లెరాసెలజితం యిచ్చేదిన్పర్గస్తుల యినవారిపేరుమీద గోదానం బంగారుపోగులు వెండికడియా
48, లుతలెచెంబు పెద్దలని పానుయిచ్చెది పూర్వకాలం నుంచిరాజుల లుయిమందగొల్ల మందహెచ్చు
49, వానిక సిలసిలాకాలంరాగి శాసనంతల మీద పెట్టుకుని యాదవకులాన్ని అనుసరించి బ్రతుకుమ
50, ని యిచ్చినాము అల్లం వుల్లనయ్ని చేరుకుచెదయ్ని యిహక్కులు తప్పరాదు కాశికంచిలో గో
51, హత్య బ్రహ్మహత్య శిశుహత్య చెసినంత పాపంసిద్దించును రగుపలి పల్లికొండ చెప్పినదర్మం
52, వాలనపూర్వ కాలమునుంచి మన యాదవవంశనికి తరతరాలనుండి తరతరాలకుయి మందెచ్చు
53, బత్తుడుమన ఆడబిడ్డ పంటెవాడుయి ఆర్తివానికి వంటపాత్రవేరె అన్న పోషణ అదాయం వెడ-
54, సంబావన అన్ని విదాలజరిపిన సంతోషంగా సాగనంపగలరు యిటువంటెబిడ్డని తిట్టన కొట్టెనిచె
55, ప్పరానటు వంటెపాపం సిద్దించును భరతుడు సభనువిచారించి వెదకిచెప్పన మొదటె పీలుకింబె
56, మనగాత్రతాయగమున మందరగిరి పాలించిన అశ్వనంద్నంరాజు ధరనిభాస్యర పురంబుఏలిన య-
57, యాతిరాజు సంతతి సూర్యవంశ అలిచెంతగోత్రక కాశకొకయందు వంశొద్దారకులకు గార్గెయమహా
58, రుషికలియుగ మునపంచలింగాలకొండ మీద కాటమరాజు అయితమరాజు పులిచర్కదెవయ-
59, రగుపతి పల్లికొండ ౫౨రాజ్యాల యదువంశరాజులు సభచేసి కూచ్చుండ మందగొల్ల మందెహచ్చు
60, బత్తుని నిర్ణయించి యిచ్చిన రాగి సన్నతో తోవున్న హక్కులు యుగాలు మారిన అక్కులు మా-
61, ర నేరవు స్వదత్తా ద్విగుణం సణ్యం పరదత్తాను పాలనం పరదత్తపహారేణ స్వదత్తానిప్ప**
62, భవేతొదాన వాలనమోర్మ ధ్యెస బత్రయోనుసాలనందాన స్వర్గమహా ప్నొలి సాతనం నందనస
63, వాదం శ్రీ శ్రీ శ్రీ యీరాగి పత్రం సమాపం
செப்பேடு கூறும் செய்தி:-
![]() |
சூரிய தேவன் |
சாலிவாஹன சக வருடம் 1465 ஈஸ்வரனின் திருவருளால் நிகழும் வருடம், சிராவண (ஆவணி) மாதம் சுக்ல பக்ஷம் வியாழக்கிழமை காஞ்சியில் கோவில் கொண்டுள்ள மகாதேவர் சன்னிதானத்தின் முதல் முகமண்டபத்தில், சிந்தலபதி மகராஜா அவர்கள் வஜ்ர சிம்மாசனத்தில் அமர்ந்து அலங்கரித்து ஆட்சிப்புரிந்து வந்த காலத்தில், மற்றும் காட்டமராஜூ மற்றும் அயித்தமராஜூ இறப்பிற்கு பிறகான காலத்தில்,
பள்ளிகொண்டதேவர் மற்றும் பரதன் ஆகியவர்களிடம் கோடிக்கணக்கான யாதவர்களின் முன்னிலையில் யாதவர்களின் வரலாறு கேட்கப்பட்டது, அப்போது அவர்கள் கூறியது என்னவென்றால், முற்காலத்தில் ஏழு தலைமுறை மாமன்னர்களும், அவர்களது மகன்களான ராஜகுமாரர்களும் மந்தகிரியையும், அயோத்தியையும் ஆட்சி செய்து பிறகு பாசறபுரத்திற்கு குடிப்பெயர்ந்து அரசமைத்து ஆண்டனர்.
![]() |
யயாதி மகாராஜா |
ஆவுல பூபதி யயாதி ராஜாவின் சந்ததியில் ரவிவம்சத்தில் பாலகாம கோத்திரத்தில் உதித்த சத்தியபுத்திரனான கங்கராஜூ பாசறபுரத்தில் அரசாண்டு வந்தார்.
பிற்காலத்தில் வடுகநாட்டின் வடக்குப் பகுதிகளை விட்டு தென் பகுதிக்கு குடிபெயர்ந்து வந்த வல்லாவுல வலராஜூ ஒருக்கல் மற்றும் சர்பகத்திலபுரத்தைக் கடந்து கனகசிம்ஹல கோட்டையை அடைந்தார்.
வல்லமகொண்டாவில், காளிங்கம் மற்றும் கோவர்த்தனகிரி ஆகிய தலங்களில் உள்ள தேவாலயங்களுக்கு இணையாக கடவுள்களுக்கு கோவில்கள் எழுப்பப்பட்டன.
வல்லமாதேவி (ஆவுல வல்லராஜூ அரசியார்) மலுசுக்கால பர்வதத்தில் கைலாசபுரத்தில் குடிகொண்டுள்ள சங்கரனான சிவபெருமான நோக்கி தவம் செய்து பெற்ற வரங்களின் பலனாக சிவபெருமானின் அருளால் அவளுக்கு ஐந்து மகன்கள் மற்றும் மகள்கள் பிறந்தார்கள்.
![]() |
திருப்பதி |
வல்லமாதேவி பர்வதமலையை ஜங்கவாருகளுக்கும், திருப்பதியை தன்னுடைய சேவகர்களுக்கும், தொனகொண்டாவை தன்னுடைய மகன்களுக்கும் வழங்கியருளினார்.
வல்லமாதேவி மற்றும் அவரது மகன்கள் ஆகியோர் இறப்பதற்கு முன்னதாக, அவர்கள் ஸ்ரீகுரிகாரமல்ல கோட்டை, மொனுகுநாதன்கோட்டை மற்றும் பெஜ்ஜவாடா (விஜயவாடா) ஆகிய ராஜ்ஜியங்களுக்கு எதிராக போர்களை நடத்தி அப்பகுதிகளை வெற்றிக்கொண்டனர்.
ஐந்து ராஜ்ஜியங்களைச் சேர்ந்த யாதவர்களை ஒருக்கல்லை தலைநகராகக்கொண்டு ஆண்ட காகத்திய மாமன்னர் பிரதாபருத்ர தேவர் அழைத்தார்.
யாதவர்கள் சார்பில் அயித்தமராஜூ கஞ்சர்லவாரு மக்களை தோற்கடித்து வெற்றிவாகை சூடினார். போரில் வெற்றிக்கண்ட பின்னர் ஒருக்கல் மன்னர் பிரதாபருத்திர தேவர் யாதவர்களை பல்லக்குகள், குதிரைகள் மற்றும் குடைகளுடன் வரவேற்று ஒருக்கல் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நகர்வலம் அழைத்துச் சென்றார்.
![]() |
மகாநதி |
காட்டமராஜூவின் அண்ணன் முறையினான பத்திரண்ணா தான் ஆண்ட பகுதியில் உள்ள நதிகளோடு சேர்த்து கங்கை, யமுனை, சர்ஸ்வதி, கிருஷ்ணா, நர்மதை, சிந்து, காவேரி போன்ற பல நதிகளுக்கு விஜயம் செய்தார்;
மேலும்,
• மேருபர்வதம்
• ஸ்ரீசைலம்
• காலேஸ்வரம்
• இமயமலை
• காசி
• ஏரலேஸ்வரம்
• மஹாநதி
• ராமேஸ்வரம்
• ஸ்ரீரங்கம்
• பஞ்சலிங்கல கொண்டா
• பத்ராச்சலம்
• பெனுகஞ்சி (காஞ்சிபுரம்)
• எர்ரப்பகொண்டா
• சித்தேஸ்வரம்
• கொட்டப்பகொண்டா
• ராமப்பா கோவில்;
கொரட்டகை ஆற்றங்கரையில் எர்ரய்யராஜூ தனது மந்தைகளை மேய்த்த பகுதிகள் முதல் பெனுகொண்டா, நாரதன்கொண்டா, அற்புதகிரி வரையிலும்,
காட்டமராஜூ தனது கருமாஞ்சி மந்தைகளின் மந்தைகளின் தண்ணீருக்காக சப்த சுவாமிகளுடன் மோதலில் ஈடுபட்ட இடங்கள் முதல் ராயலக்கோட்டைகொண்டா, நம்தூரிவாடா நந்திகொண்டா மற்றும் பால்நாடு, பென்னாறு, செய்யேறு, துங்கபத்ரை, கோதாவரி, நாகவலி, வம்சதாரா, அமராவதி, நல்லலேகதா, அருர்லகர்வம்; எல்லைகள் வரையும்
கங்கை ஆவு மந்தைகளின் தண்ணீருக்காக ராமகிரி, மத்தேடா, முன்னேறு, நந்திகொண்டா, நரசிம்மன் கொண்டா (பதாபிகல்லு) ஜடாமுனி, குர்லபகலா, தேவகிரில கொண்டா, கடாலு, அனந்தகிரி, கன்னதர்மபுரி, சந்திரகிரி, மானேரு, மாவிலிகுர்வா, ராமகுண்டம், யுத்தகிரி, குத்தி கொண்டா, காரம்புடி, கொண்டைவீடு, கம்மம் மெட்டு, பெல்லம்கொண்டா, பிரம்மராம்ப குர்வம், போலரம்மா அர்ணம், குர்வாலா காமஞ்சி, கண்டகாடா, கன்கவண்டலா போன்ற மலைகளுக்கும் விஜயம் செய்தார். ஐயாக்களின் ஆசியுடன் சாம்பர பசுக்களுக்கு வேலிகளை அமைத்தார்.
புலிகளிடமிருந்து மந்தைகளைக் காக்க நெல்லூர் பிராந்தியத்திற்கு சென்றார். மூத்த சகோதரனை ஆபத்தில் இருந்து காப்பாற்ற எர்ரய்யராஜூ சுங்க வரி செலுத்த பணம் கொண்டு வந்தார்.
எர்ரகட்டபாடுவில் யாதவர்கள் ஆரம்பம் முதலே பல இன்னல்களை எதிர்கொண்டனர்.
பின்னர் அவர்கள் போத்துராஜூ குர்வம் என்னும் பகுதிக்கு சென்றடைந்தனர். அவ்விடத்தில் காட்டமராஜூ கங்காவை திருமணம் செய்ய முடிவு செய்து அங்கேயே முகாமிட்டார். திருமணம் ஆடம்பரமாக நடந்தேறியது.
மறுநாள் யாதவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். பலியிடப்பட்ட உணவை மாடுகளைச் சுற்றி வீசுமாறு உத்தரவிடப்பட்டது. ஆனால் இதை யாரும் செய்யத் தயாராக இல்லை, இருப்பினும் காட்டமராஜூ, அயித்தமராஜூ மற்றும் பள்ளிகொண்டாதேவரிடம் அனுமதி பெற்று மந்தைபோயிடு ஜக்கய்யா அதைச் செய்ய முன் வந்தார்.
இதன் பின்னர் அனைத்து யாதவர்களுக்கும் செலகோல பட்டம் வழங்கப்பட்டது. மந்தகொல்ல ஜக்கய்யாவிற்கு பட்டம் வழங்கப்படவில்லை.
ஜக்கய்யாவிற்கு ஏன் பட்டத்தைப் பெறவில்லை என்று விசாரித்துவிட்டு, ஜக்கய்யாவை மந்ததெச்சு என்று நியமித்துவிட்டு, யாதவ குலங்களான
• எர்ர கொல்ல,
• பாகனாட்டி கொல்ல,
• பூஜ கொல்ல,
• மொதட்டி கொல்ல,
• சதன கொல்ல,
• முஸ்டி கொல்ல,
• கர்ணே கொல்ல,
• எய கொல்ல,
• பெத்தெட்டி கொல்ல,
• திர்ண கொல்ல,
• மந்த கொல்ல
(11 பிரிவுகளின் பெயர்கள் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது ஒரு பிரிவின் பெயர் தவறுதலாக விடுபட்டுள்ளது)
ஆகிய அனைவருக்கும் விதிகளை இயற்றினார். தெய்வங்களுக்கான பூஜைகளில் மற்றும் விழாக்களில் பங்களிக்க அனைத்து யாதவ குலங்களும் இணைந்து பத்து பசுக்களைக் கொண்டவர்கள் ஒரு கன்றுக்குட்டி வீதமும், ஒன்பது ஆடுகளை வைத்திருந்தால் ஒரு ஆட்டுக் குட்டி வீதமும்; நிலங்களை வைத்து விவசாயம் செய்வோர் விவசாயம் செய்யும் பணியாளுக்கு சமமான ஒரு வருட சம்பளம் அல்லது குறைந்தபட்சம் ஒரு மாத சம்பளமாவது கொடுக்கப்படவேண்டும் என்றும் மேலும், இறந்த குடும்ப உறுப்பினர்களின் நினைவாக கோதானம் அல்லது தங்க காது வளையங்கள் (கம்மல்) அல்லது வெள்ளி வளையல் அல்லது குறைந்தபட்சம் செப்பு குவளையாவது அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் உறுதியளித்து 12 யாதவ குலங்களும் இணைந்து செப்புப் பட்டயத்தை வழங்கினர்;
வானம் உள்ள வரை மந்தகொல்லவார்களும், மந்தெச்சுலவாருகளும் இந்த செப்பேட்டை தலையில் சுமந்து கொண்டு யாதவர்களை பின்பற்ற வேண்டும். யாதவர்கள் என்ன நடந்தாலும் இந்த உத்தரவை மதிக்க வேண்டும்; இதை மதிக்காதவர்கள் காசியிலும், காஞ்சியிலும் பசுவையும், பிராமணரையும், குழந்தையையும் கொன்ற பாவத்தை சந்திக்க நேரிடும்.
இது பள்ளிகொண்டாதேவரால் நமக்குச் சொல்லப்பட்ட தர்மம். இந்த தர்மம் பழங்காலத்திலிருந்தே யாதவர்களிடம் பாரம்பரியமாக தொடர்ந்து வருகின்றது.
மந்தெச்சுலவாருகள் நமது குடும்பத்தில் நம்முடைய மகள் போன்றவர்கள். உணவும், பணமும் கொடுத்து அவனை மகிழ்விக்க வேண்டும். திட்டியோ, அடித்தோ அவர்களின் மனம்நோகும்படி செய்தால் அது பாவம்.
திரேதாயுகத்தில் அஸ்வனந்தராஜூ மந்தகிரியை ஆண்டபோது பரதன் பரிபூரண அரசவை சபையில் இதைத்தான் சொன்னார்.
யயாதிராஜாவின் வழித்தோன்றல்களான தரணி பாசறபுரத்தை ஆண்ட சூரியவம்சம், அலிசெந்த கோத்திரத்தைச் சேர்ந்த மன்னர்களிடம் கார்கேய மகாமுனிவர் இதனைக் கூறினார். கலியுகத்தில் காட்டமராஜு, அயித்தமராஜு, புலிச்சார்ய தேவய்யா, ரகுபதி பள்ளிகொண்டா தேவர் மற்றும் 32 ராஜ்ஜியங்களைச் சேர்ந்த யதுவம்ச அரசர்களும் பஞ்சலிங்கக் கொண்டாவில் கூடி, மந்தெச்சுலவாருகள் மற்றும் மந்த கொல்லவாருகளின் உரிமைகளை நிர்ணயம் செய்து, இந்தச் செப்பேட்டு சாசனத்தின் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காலங்கள் மாறினாலும் இந்த உத்தரவுகள் மாறாது என்றென்றும் தொடரும்.
61 மற்றும் 62 வரிகள் புனித சுலோகங்கள் இடம்பெற்றுள்ளன.
63, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ. இத்துடன் செப்புப் பட்டய சாசனம் முற்றுப்பெற்றது.